×

திமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது

சென்னை: திருவல்லிக்கேணி அருகே உள்ள பல்லவன் சாலை காந்தி நகரை சேர்ந்தவர் மதன் (36). அதிமுக நிர்வாகியான இவர், சில மாதங்களுக்கு முன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். உள்ளாட்சி தேர்தலையொட்டி திமுகவுக்காக வாக்கு சேகரித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள கூவம் கால்வாய் அருகே இவர் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த 4 பேர், மதனை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில், மதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திருவல்லிக்கேணி போலீசார், மதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, கொலை நடந்த பகுதியை பார்வையிட்டனர். முதற்கட்ட விசாரணையில், மதனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு திருமணமான பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது அந்த பெண்ணின் மகன் வினோத்துக்கு தெரியவந்தது. இதனால் மதன் மீது வினோத் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு மதன், வினோத் வீட்டில் அவரது தாயுடன் இருந்துள்ளார். அப்போது, வினோத் வீட்டிற்கு வந்ததால் மதன் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு பல்லவன் சாலை நோக்கி நடந்து சென்றுள்ளார். ஆத்திரமடைந்த வினோத், அதே பகுதியை சேர்ந்த கணபதி, நரேந்திரன், உசேன் ஆகியோருடன் சேர்ந்து, மதனை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி பைக்கில் வந்த வினோத் மற்றும் அவரது நண்பர்கள் மதனை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வினோத், அவரது நண்பர்களான கணபதி, நரேந்திரன், உசேன் ஆகிய 4 பேரை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர்….

The post திமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dhagagam Pramukar ,Chennai ,Madan ,Gandhi Nagar, Pallavan Road ,Thiruvallykeeni ,Dizhagam Mukharamar ,
× RELATED காஞ்சிபுரம் அரசு பள்ளியில் முதலிடம்:...